இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சோகம்
சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக பாகிஸ்தானில் கோடிக்கணக்கான மக்கள் வீடிழந்து பரிதவிக்கின்றனர் .
ஐ. நா சபை குழந்தைகள் நல அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது அது என்னவென்றால் இன்னும் ஆறு மாத காலத்தில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் காலரா, நிமோனியா போன்ற வியாதிகளாலும் மற்றும் சரியான ஊட்டச் சத்து உணவு கிடைக்காமலும் இறக்கக்கூடும் என அறிவித்து இருக்கிறது. மிகவும் வேதனையான ஒரு செய்தி.
நாம் அக் குழந்தைகளுக்காக பிரார்த்திப்போம். அங்கு சகஜ நிலை திரும்பவும் அக் குழந்தைகள் நலம் பெறவும் , சந்தோசம் நிலை பெறவும்.
இது ஒரு இந்திய சகோதரனின் பிரார்த்தனை.

No comments:
Post a Comment