இலக்கியத்தில் புதிய தொழில் நுட்பத்தை கொண்டு வருவதில் தமிழுக்கு என்றுமே முதலிடம் உள்ளது. அந்த வகையில் செல்பேசியை மூன்றாம் தலைமுறைக்கு தமிழ் அழைத்துச் சென்றுள்ளது.
ஒரு செல்பேசியில் ஆயிரம் புத்தகங்களை படிக்கும் வசதியை 'மொபைல் வேதா ' என்ற நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த 1 1/2 ஆண்டு காலமாக வேலூரில் VIT - பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வருகிறது.
'SEED' என்று பெயரிடப்பட்டுள்ள செல்பேசி நூலகத்தை கடந்த சனவரி 27 - ஆம் தேதி VIT - பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. ஜி. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டார்கள்.இதை பற்றிய தகவல்கள் http://www.fublish.com/seed என்ற இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.
இது ஒரு மெமெரி கார்ட் (Memory card) அல்லது குறுந்தகடு (C.D) வடிவில் கிடைக்கிறது. இதை நாம் எளிதில் நம்முடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் 600 தமிழ் நூல்களும் , 400 ஆங்கில நூல்களும், 10 ஒலி வடிவ நூல்களும், 50 பிரபலமானவர்களின் தவல்களும் உள்ளன.
சங்க இலக்கியத்தில் துவங்கி, சமகால இலக்கியம் வரையிலும் , பக்தி நூல்கள் , பக்தி பாடல்கள் , பாரதியார் பாடல்கள், நாவல்கள் , சிறுகதைகள் ,கவிதைகள், குழந்தைகளுக்கான நூல்கள் மற்றும் பயனுள்ள பொதுத் தகவல்கள் உள்ளன. சுருக்கமாக ,ஒரு நூலகத்தையே நம் செல்பேசியில் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்லும் ஓர் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.
இதைப்பற்றி சன் டி.வி , குமுதம், தி ஹிந்து , டெக்கான் குரோனிக்கல் , இந்தியன் எக்ஸ்பிரஸ் , தினமலர், மாலை மலர் போன்ற பல்வேறு ஊடகங்களில் கடந்த ஒரு மாதகாலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன .
விரைவில் எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் நாவல்கள் செல்போனில் படிக்கும் விதமாக வெளிவர உள்ளன .
மேலும் விருப்பப்படும் பதிப்பகத்தாலர்களையும் மற்றும் எழுத்தாளர்கள் இந்த புதிய தொழில் நுட்பத்தோடு கைகோர்க்க அழைக்கிறோம்.
No comments:
Post a Comment