Friday, November 20, 2009

சமீபத்தில் ரசித்த சுகுமாரன்கவிதை

நீரின்றி அமையாது

திட‌மென்றால் இய‌ங்குவ‌து சிர‌ம‌ம்
ஆவியென்றால் அட‌ங்குவ‌து க‌டின‌ம்
என‌வே
திர‌வ‌ங்க‌ளால் பிணைத்தேன் உற‌வுக‌ளை

ஒவ்வொரு உற‌வுக்கும்
ஒவ்வொரு திர‌வ‌ம்

தாய்மைக்கு முலைப்பால்
ச‌கோத‌ர‌த்துவ‌த்துக்கு இர‌த்த‌ம்
காத‌லுக்கு உமிழ்நீர்
தோழ‌மைக்கு விய‌ர்வை
ப‌கைக்குச் சீழ்
தாம்ப‌த்ய‌துக்கு ஸ்க‌லித‌ம்
துரோக‌த்துக்குக் க‌ண்ணீர்

பிணைத்து முடிந்த‌தும் கை க‌ழுவினேன்
த‌ண்ணீரால்
மீண்டும்
அதே நீரால் பிணைத்தேன்
உன்னையும் என்னையும்

தெரியுமா உன‌க்கு?
உற‌வுக‌ளைப் பிணைக்க‌
த‌ண்ணீர் த‌விர‌ த‌ர‌மான‌ திர‌வ‌ம்
வேறில்லை

என் உற‌வுக‌ள் எல்லாம்
தண்ணீரால் ஆன‌வை

ஏனெனில்
நீரின்றி அமையாது உற‌வு.

-சுகுமாரன்-

No comments: