நீரின்றி அமையாது
திடமென்றால் இயங்குவது சிரமம்
ஆவியென்றால் அடங்குவது கடினம்
எனவே
ஒவ்வொரு உறவுக்கும்
ஒவ்வொரு திரவம்
தாய்மைக்கு முலைப்பால்
சகோதரத்துவத்துக்கு இரத்தம்
காதலுக்கு உமிழ்நீர்
தோழமைக்கு வியர்வை
பகைக்குச் சீழ்
தாம்பத்யதுக்கு ஸ்கலிதம்
துரோகத்துக்குக் கண்ணீர்
பிணைத்து முடிந்ததும் கை கழுவினேன்
தண்ணீரால்
மீண்டும்
அதே நீரால் பிணைத்தேன்
உன்னையும் என்னையும்
தெரியுமா உனக்கு?
உறவுகளைப் பிணைக்க
தண்ணீர் தவிர தரமான திரவம்
வேறில்லை
என் உறவுகள் எல்லாம்
தண்ணீரால் ஆனவை
ஏனெனில்
நீரின்றி அமையாது உறவு.
-சுகுமாரன்-
-சுகுமாரன்-
No comments:
Post a Comment